செய்திகள்
நொய்யல் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய தொழிலாளி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்:
நொய்யல் அருகே மரவாபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் அவரது மனைவி மல்லிகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜேந்திரன் எதுவும் சொல்லாமல் வெளியூர் சென்று விட்டு ஒரு மாதம் கழித்து வீடு திரும்புவது வழக்கம்.
அதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மல்லிகாவிடம் தகராறு செய்து கொண்டு, வேலாயுதம்பாளையம் செல்லும் பஸ்சில் ஏறி ராஜேந்திரன் சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் மல்லிகா, உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.