செய்திகள்
நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2019-08-22 08:13 GMT   |   Update On 2019-08-22 08:13 GMT
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்கேஎம்.சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில பொது செயலாளர் வானுமாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்களும் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Tags:    

Similar News