செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே மனைவி விவாகரத்து கேட்டதால் டிரைவர் தற்கொலை

Published On 2019-08-20 14:02 GMT   |   Update On 2019-08-20 14:02 GMT
கிருஷ்ணகிரி அருகே மனைவி விவாகரத்து கேட்டதால் மனமுடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகன் திம்மராயன் (வயது27). டிரைவர் வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

பின்னர் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது திம்மராயன் மனைவி, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். 

இதில் மனமுடைந்து காணப்பட்ட திம்மராயன் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றவர் மறுநாள் ஆகியும் எழுந்து வராததால், அவரது பெற்றோர் வீட்டினுள் சென்று பார்த்து உள்ளனர். அப்போது திம்மராயன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News