செய்திகள்
ஜெ தீபா

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்: ஜெ. தீபா

Published On 2019-08-19 11:25 GMT   |   Update On 2019-08-19 11:47 GMT
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவால் தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரின் அண்ணன் மகளான தீபா அதிமுக-வில் உள்ள தொண்டர்களை கொண்டு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு போட்டியாக அவரது கணவரும் ஒரு அமைப்பை தொடங்கினார். பின்னர் இரண்டு அமைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் குடும்பத்தை கவனிக்க இருப்பதால் தீபா பேரவையை கலைக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அதிமுக-வுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News