செய்திகள்
கொள்ளை

பெரியமேடு தோல் கம்பெனியில் ரூ.20 லட்சம் நூதன கொள்ளை

Published On 2019-08-16 09:40 GMT   |   Update On 2019-08-16 09:40 GMT
சென்னை பெரியமேட்டில் தோல் கம்பெனியில் பை வாங்குவது போல நடித்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை பெரியமேட்டில் ஏராளமான தோல் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு கம்பெனி வைத்து நடத்தி வருபவர் இஸ்டாக் அகமது. இவரது நிறுவனத்துக்கு துணி பைகளை மொத்தமாக வாங்க வந்திருப்பதாக கூறி 2 பேர் சென்றனர். கம்பெனி அலுவலகத்தில் வைத்து பேசிக் கொண்டிருந்த இருவரும் தண்ணீர் கேட்டுள்ளனர்.

இஸ்டாக் அகமது தண்ணீர் எடுக்க சென்ற போது 2 பேரும் அலமாரியில் வைத்திருந்த ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இதுபற்றி பெரியமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பை வாங்குவது போல நடித்து நூதன முறையில் கைவரிசை காட்டி விட்டு தப்பிய 2 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. கொள்ளையர்களை பிடிக்க கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News