செய்திகள்
திருச்சியில், நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. முகாமில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., பி.இ., பி.டெக் படித்தவர்களும், 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
தனியார்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் நாளை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பயன்பெறலாம். இத்தகவல்களை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. முகாமில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., பி.இ., பி.டெக் படித்தவர்களும், 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
தனியார்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் நாளை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பயன்பெறலாம். இத்தகவல்களை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.