செய்திகள்
விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை வழங்கிய காட்சி

விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள்

Published On 2019-08-12 18:18 GMT   |   Update On 2019-08-12 18:18 GMT
மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.
பொன்னேரி:

பொன்னேரியில் வேளாண் மை துறை அலுவலகத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் 29 வயது உடையவர்கள் மாதந்தோறும் ரூ.100 வீதம் 40 வயது வரை செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகை அடிப்படையில் அரசு பங்களிப்பு வழங்கும். 60 வயது அடைந்த பின்னர் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இறப்புக்குப் பின் குடும்பத்திற்கு பாதி ஓய்வுதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும்போது தங்களின் ஆதார் அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.

இந்த முகாமில் வேளாண் மை அலுவலர் டில்லிகுமார், துணை வேளாண்மை அலுவலர் நாயகம், வேளாண்மை உதவி அலுவலர்கள் ஐஸ்வர்யா, சிவலிங்கம், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News