செய்திகள்
நகை கொள்ளை

கொரடாச்சேரி அருகே வீட்டில் நகை கொள்ளை

Published On 2019-08-10 09:15 GMT   |   Update On 2019-08-10 09:15 GMT
கொரடாச்சேரி அருகே வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த குளிக்கரை, கீழபுலியூரை சேர்ந்தவர் அலமேலுமங்கை (வயது 56). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.

இந்நிலையில் வீடு திரும்பிய அலமேலுமங்கை வீட்டில் நகை திருடப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சித்தாரா வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News