செய்திகள்
விபத்து

எட்டயபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2019-08-06 11:56 GMT   |   Update On 2019-08-06 11:56 GMT
எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள அஞ்சிரான்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 46), கூலி தொழிலாளி. இவரது மனைவி அழகம்மாள்(39). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தர்மராஜ் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் எட்டயபுரத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சுரைக்காப்பட்டி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் தர்மராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

விபத்தில் படுகாயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தர்ம ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கொக்கம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News