செய்திகள்
கொள்ளை

சோழவந்தான் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வீட்டில் 18 பவுன்-பணம் கொள்ளை

Published On 2019-08-06 10:58 GMT   |   Update On 2019-08-06 10:58 GMT
சோழவந்தான் அருகே திருவேடகத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வீட்டில் 18 பவுன்-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தைச் சேர்ந்தவர் ராமு. முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான இவர், 2 நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த நகை-பணத்தை திருடிக் கொண்டு தப்பினர்.

இன்று காலை ராமு வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News