செய்திகள்
கைது

கோயம்பேடு அருகே ரவுடி கொலையில் மேலும் 3 பேர் கைது

Published On 2019-08-06 08:56 GMT   |   Update On 2019-08-06 08:56 GMT
கோயம்பேடு அருகே ரவுடி கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

திருவேற்காடு அன்னை அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது22). ரவுடி. நேற்று முன்தினம் இரவு நெற்குன்றம் ஏ.வி.கே. நகரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுக்குள் யார் பெரிய ரவடி என்பதில் ஏற்பட்ட மோதலில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் ஏற்கனவே மண்ட திணேஷ், ஆகாஷ் என்கிற ஆனஸ்ட்ராஜ் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த மாடா விக்கி, பேட்ட சுரேஷ், பலாக்கொட்டை கார்த்திக் ஆகிய 3பேரை கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

Tags:    

Similar News