செய்திகள்
கொள்ளை

பொன்னேரியில் 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2019-08-06 06:36 GMT   |   Update On 2019-08-06 06:36 GMT
பொன்னேரியில் 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 39).

இவர் மீஞ்சூர் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்றார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெளி நாட்டு பணம் மற்றும் டிவி., வெள்ளி நாணயங்கள், பித்தளை பொருட்களை கொள்ளைடித்து சென்றுள்ளனர்.

இதேபோல மீஞ்சூரை அடுத்த ஞாயிறு பகுதியில் ஆயில் கடையிலும் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இதன் அருகே மண்ணார் (40) என்பவரின் கடையில் இருந்து டிரில்லிங் எந்திரத்தை திருடி சென்றுள்ளனர். இந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து வருவது கிடையாது என குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News