செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது முகமது யாசின், ஷாஜகான், ஜியாவுதீன், பைசல் அமீன், முகமது இத்ரீஸ் ஆகிய 5 பேரும் தங்களது உடலில் ரூ.26.55 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் எடையுள்ள 7 தங்க சங்கிலிகள், 8 தங்க காசுகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது முகமது யாசின், ஷாஜகான், ஜியாவுதீன், பைசல் அமீன், முகமது இத்ரீஸ் ஆகிய 5 பேரும் தங்களது உடலில் ரூ.26.55 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் எடையுள்ள 7 தங்க சங்கிலிகள், 8 தங்க காசுகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.