செய்திகள்
கணவர் பிரிந்து சென்றதால் வேதனை- விடுதியில் தங்கி இருந்த பெண் தற்கொலை
புதுவையில் கணவர் பிரிந்து சென்ற வேதனையில் விடுதியில் தங்கியிருந்த பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை பெரிய காலாப்பட்டு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சீத்தாலட்சுமி. இவது மகள் கீதா. (வயது 37). இவருக்கும், திருஞானசம்பந்தம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. கீதாவுக்கும், அவரது கணவர் திருஞானசம்பந்தத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து கீதா தட்டாஞ்சாவடி கஸ்தூரிபாய் நகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். எனினும் கணவர் பிரிந்து சென்றதால் கீதா மனவேதனையில் இருந்து வந்தார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கீதா சம்பவத்தன்று விடுதியில் எலிமருந்தை (விஷம்) வாங்கி தின்று விட்டார். இதில், மயங்கி விழுந்த கீதாவை விடுதி காப்பாளர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கீதா நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து கீதாவின் தாயார் சீத்தாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை பெரிய காலாப்பட்டு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சீத்தாலட்சுமி. இவது மகள் கீதா. (வயது 37). இவருக்கும், திருஞானசம்பந்தம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. கீதாவுக்கும், அவரது கணவர் திருஞானசம்பந்தத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து கீதா தட்டாஞ்சாவடி கஸ்தூரிபாய் நகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். எனினும் கணவர் பிரிந்து சென்றதால் கீதா மனவேதனையில் இருந்து வந்தார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கீதா சம்பவத்தன்று விடுதியில் எலிமருந்தை (விஷம்) வாங்கி தின்று விட்டார். இதில், மயங்கி விழுந்த கீதாவை விடுதி காப்பாளர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கீதா நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து கீதாவின் தாயார் சீத்தாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.