செய்திகள்
தற்கொலை

பாபநாசத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

Published On 2019-07-31 10:18 GMT   |   Update On 2019-07-31 10:18 GMT
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:

பாபநாசம் செட்டித்தெரு விநாயகர்புரத்தில் வசித்து வந்தவர் அப்துல் ரகுமான் (வயது 69). மீன் வியாபாரி. மீன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மீன்கடை வியாபாரம் சரியில்லாததாலும், கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அப்துல் ரகுமான் வீட்டிற்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்குமாட்டி கொண்டார். பின்னர் உயிருக்குஆபத்தான நிலையில் அப்துல் ரகுமான் சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து பாபநாசம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News