செய்திகள்
தட்டப்பாறை அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். லாரி டிரைவர். இவரது மனைவி அருணாச்சலம் (வயது 38). நேற்று காலையில் பாஸ்கர் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மதியம் அருணாச்சலம் உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இது குறித்து அருணாச்சலம் தட்டபாறை போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். லாரி டிரைவர். இவரது மனைவி அருணாச்சலம் (வயது 38). நேற்று காலையில் பாஸ்கர் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மதியம் அருணாச்சலம் உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இது குறித்து அருணாச்சலம் தட்டபாறை போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.