செய்திகள்
உண்மையான ஆன்மிகவாதி யார்? - வெ.இறையன்பு விளக்கம்
போயஸ் கார்டனில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், 'எது ஆன்மிகம்?' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு இன்று நடைபெற்றது.
சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், 'எது ஆன்மிகம்?' என்ற தலைப்பில் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆன்மிகவாதி என்பவர் உயர் திணை, அஃறிணை என பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து உயிரிடத்திலும் சமமாக அன்பு செலுத்துபவரே உண்மையான ஆன்மிகவாதி என்ற அவர், இதற்கு உதாரணமாக, ரமண மகரிஷியை குறிப்பிட்டார்.
ரமண மகரிஷியை தேடி உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் லஷ்மி என்ற பசுவை தேடிச் சென்ற நிகழ்வை சுவாரசியமாக விவரித்தார்.