செய்திகள்
விஷம்

தண்டராம்பட்டு அருகே பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-07-27 10:45 GMT   |   Update On 2019-07-27 10:45 GMT
தண்டராம்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகே உள்ள பெரும்பாக்கம் பண்டிதபட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 45). இவரது மனைவி பானு (40). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த பானு நேற்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பானு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News