செய்திகள்
கைது

சிவகாசி அருகே வி‌ஷம் வைத்து கொல்லப்பட்ட 30 ஆடுகள் - விவசாயி கைது

Published On 2019-07-23 10:58 GMT   |   Update On 2019-07-23 10:58 GMT
சிவகாசி அருகே தோட்டத்தில் புகுந்து மேய்ந்ததால் ஆத்திரமடைந்த விவசாயி ஆடுகளுக்கு வி‌ஷம் வைத்தார். இதில் 30 ஆடுகள் இறந்தன.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கீழ தாயில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யராஜ் (வயது 43). இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான ஆடுகள் தினமும் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வருவது வழக்கம். நேற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாலையில் ஆடுகள் கொட்டகைக்கு திரும்பின.

அவைகள் வந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தன. இவ்வாறு 30 ஆடுகள் இறந்தது. இதை பார்த்து சூர்யராஜ் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிவகாசி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கீழதாயில் பட்டியில் கோட்டையூரை சேர்ந்த பழனிசெல்வம்(50) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்குள் ஆடுகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனிசெல்வம், ஆடுகளுக்கு குருணை மருந்து கலந்து வைத்து உணவை கொடுத்து சாகடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பழனிசெல்வத்தை கைது செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News