செய்திகள்
தாக்கி கொலை மிரட்டல்

ஆண்டிப்பட்டி அருகே பொதுப்பாதை பிரச்சினையில் விவசாயி மீது தாக்குதல்

Published On 2019-07-22 11:16 GMT   |   Update On 2019-07-22 11:16 GMT
ஆண்டிப்பட்டி அருகே பொதுப்பாதை பிரச்சினையில் விவசாயி தாக்கப்பட்டார்.

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே வைகை ஸ்ரீரங்கபுரம் எஸ்.ஆர்.பி நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் தனது தோட்டத்தில் மின் மோட்டாரை பழுது நீக்க பொதுப்பாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி அமுதா மனோகரனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இது குறித்து வைகை அணை சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த வேல் முருகன் (வயது 43). இவர் குமார் என்பவருடன் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பைக்கில் சென்ற வேல் முருகனை குமார் வழி மறித்து கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கண்டமனூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News