செய்திகள்
பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகளிடம் 10 வாலிபர்கள் பாலியல் கொடுமை
புதுச்சேரி அருகே பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகளை 10 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நேற்று முன்தினம் காலை அணிவகுப்பு நடந்தது.
அணிவகுப்பில் பங்கேற்ற 2-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்தாள். உடனடியாக ஆசிரியர்கள் சிறுமியை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்த போது உடல் முழுவதும் பல இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. அந்த சிறுமி பல மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து புதுவை குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சிறுமியின் தாயாரிடமும் விசாரணை நடந்தது. இதில், சிறுமியின் 9 வயது அக்காவும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள்.
கணவன் பிரிந்து சென்று விட்டதால் சிறுமிகளின் தாய் தன்னுடைய தாயார் வீட்டில் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு புதுவைக்கு வந்து கூலி வேலை பார்த்து வந்தார்.
இதனிடையே கூலி வேலை பார்த்த இடத்தில் சக தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட, புதுவை கோரிமேட்டில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். இதனால் குழந்தைகளை அடிக்கடி சென்று பார்க்க முடியவில்லை.
சமீபத்தில் குழந்தைகளை பார்க்க சென்றார். அப்போது அந்த குழந்தைகள் தங்களுக்கு நடந்த அநீதிகளை தாயிடம் சொல்லி அழுதனர்.
இதையடுத்து குழந்தைகளை புதுவை கோரிமேட்டுக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்து கொண்டார். திண்டிவனத்தில் பாட்டியின் பராமரிப்பில் குழந்தைகள் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது போல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
6 மாதங்களுக்கு மேலாக 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் சம்பவம் நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் என்பதால் அங்குள்ள குழந்தைகள் நல குழுவுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் பரிந்துரை செய்துள்ளார். போக்சோ சட்டத்தில் சிறுமிகள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், பேத்திகள் சீரழிக்கப்பட்ட சம்பவம் தெரிந்தும் அதை பாட்டி மறைத்துள்ளார். இதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நேற்று முன்தினம் காலை அணிவகுப்பு நடந்தது.
அணிவகுப்பில் பங்கேற்ற 2-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்தாள். உடனடியாக ஆசிரியர்கள் சிறுமியை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்த போது உடல் முழுவதும் பல இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. அந்த சிறுமி பல மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து புதுவை குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சிறுமியின் தாயாரிடமும் விசாரணை நடந்தது. இதில், சிறுமியின் 9 வயது அக்காவும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள்.
கணவன் பிரிந்து சென்று விட்டதால் சிறுமிகளின் தாய் தன்னுடைய தாயார் வீட்டில் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு புதுவைக்கு வந்து கூலி வேலை பார்த்து வந்தார்.
இதனிடையே கூலி வேலை பார்த்த இடத்தில் சக தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட, புதுவை கோரிமேட்டில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். இதனால் குழந்தைகளை அடிக்கடி சென்று பார்க்க முடியவில்லை.
சமீபத்தில் குழந்தைகளை பார்க்க சென்றார். அப்போது அந்த குழந்தைகள் தங்களுக்கு நடந்த அநீதிகளை தாயிடம் சொல்லி அழுதனர்.
இதையடுத்து குழந்தைகளை புதுவை கோரிமேட்டுக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்து கொண்டார். திண்டிவனத்தில் பாட்டியின் பராமரிப்பில் குழந்தைகள் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது போல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
மிட்டாய் வாங்கி கொடுத்தும், மிரட்டியும் சிறுமிகளை தங்களுடைய இச்சைக்கு பலியாக்கி உள்ளனர்.
விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் சம்பவம் நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் என்பதால் அங்குள்ள குழந்தைகள் நல குழுவுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் பரிந்துரை செய்துள்ளார். போக்சோ சட்டத்தில் சிறுமிகள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், பேத்திகள் சீரழிக்கப்பட்ட சம்பவம் தெரிந்தும் அதை பாட்டி மறைத்துள்ளார். இதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.