செய்திகள்
திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூசி அருகே திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
தூசி:
தூசி அருகே உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் சரவணன் (வயது 22). இவர், பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் முதலில் தங்கைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின்னர் உனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தனது பெரியப்பா வீட்டிற்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூசி அருகே உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் சரவணன் (வயது 22). இவர், பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் முதலில் தங்கைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின்னர் உனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தனது பெரியப்பா வீட்டிற்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.