செய்திகள்
கடையநல்லூர் அருகே தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி
கடையநல்லூர் அருகே கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கிலி பூதத்தான் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கிலி பூதத்தான் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.