ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 18 பவுன்-பணம் கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார்வளாகம் கிருஷ்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் குப்புசாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் நேற்று காலை குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சாத்தூரில் உள்ள உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றுள்ளார். பின்பு இரவு விட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புறம் கதவு திறந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வன்னியம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த போலீசார் உதவியுடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கொள்ளை சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.