செய்திகள்
விபத்து

மேட்டுப்பாளையம் விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-07-13 12:03 GMT   |   Update On 2019-07-13 12:03 GMT
மேட்டுப்பாளையம் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூரை சேர்ந்தவர் தனபால் (வயது38). இறைச்சி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பூங்கொடி வயது (25). சம்பவத்தன்று தனபால், மேட்டுப்பாளையத்தில் இருந்து தாயனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனபால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News