செய்திகள்
விபத்து

வடமதுரை அருகே தலைகுப்புற கவிழ்ந்த காய்கறி வேன்

Published On 2019-07-09 10:09 GMT   |   Update On 2019-07-09 10:09 GMT
அய்யலூர் அருகே காய்கறி ஏற்றி வந்த வேன் கொத்தனார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

வடமதுரை:

தேனியில் இருந்து தினசரி காய்கறிகள் ஏற்றிக்கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு காய்கறி டெம்போ வேன் வரும். நேற்று மாலை தேனியில் இருந்து வந்த இந்த வேன் அய்யலூர் அடுத்துள்ள தங்கம்மாபட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கொத்தனார் பழனிச்சாமி (வயது35) என்பவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து வேனை ஓட்டி வந்த தேனியை சேர்ந்த டிரைவர் மாயன் தப்பி ஓடிவிட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையில் கவிழ்ந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். காயம் அடைந்த பழனிச்சாமியை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News