செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

பாதிப்பு ஏற்படாவிட்டால் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்போம்- சட்டசபையில் ஓ.பி.எஸ். பேச்சு

Published On 2019-07-09 06:59 GMT   |   Update On 2019-07-09 06:59 GMT
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்பதாக ஓபிஎஸ் கூறினார்.
சென்னை:

பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் எதிர்ப்பு உள்ளது.



இது பற்றி தமிழக சட்டமன்றத்தில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, 10 சதவீத இடஒதுக்கீடு தருவது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்போம், பாதிப்பு ஏற்பட்டால் நிராகரிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News