செய்திகள்
தஞ்சை அருகே பஸ்சில் இருந்து தவறிவிழுந்த பெண் பலி
தஞ்சை அருகே பஸ்சில் இருந்து தவறிவிழுந்த பெண் கணவர் கண்முன்பு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வல்லம்:
தஞ்சை வடக்குவாசல் கல்லுக்கட்டித் தெரு பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி ரோகிணி (வயது 38). நேற்று இரவு கணவனும், மனைவியும் திருச்சிக்கு சென்றுவிட்டு அரசு பஸ்சில் தஞ்சாவூர் வந்தனர்.
அந்த பஸ் வளம்பக்குடி பகுதியில் வந்தபோது காற்று பலமாக வீசியதால் பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த ரோகிணி எழுந்து முன்பகுதியில் உள்ள சீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது படிக்கட்டு பகுதியில் சென்ற ரோகிணி தவறிவிழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை கணவர் வில்சன் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் செங்கிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை வடக்குவாசல் கல்லுக்கட்டித் தெரு பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி ரோகிணி (வயது 38). நேற்று இரவு கணவனும், மனைவியும் திருச்சிக்கு சென்றுவிட்டு அரசு பஸ்சில் தஞ்சாவூர் வந்தனர்.
அந்த பஸ் வளம்பக்குடி பகுதியில் வந்தபோது காற்று பலமாக வீசியதால் பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த ரோகிணி எழுந்து முன்பகுதியில் உள்ள சீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது படிக்கட்டு பகுதியில் சென்ற ரோகிணி தவறிவிழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை கணவர் வில்சன் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் செங்கிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.