செய்திகள்
மாயம்

ராஜபாளையம் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி மாயம்

Published On 2019-07-08 10:07 GMT   |   Update On 2019-07-08 10:07 GMT
ராஜபாளையம் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் காலனி தெருவைச் சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது26).

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது முருகேஸ்வரி கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த முருகேஸ்வரி கணவருடன் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் மாரிமுத்து தனது வீட்டை காலி செய்து பொருட்களுடன் மாயமாகி விட்டார். தகவல் அறிந்த முருகேஸ்வரியின் குடும்பத்தினர் மாரிமுத்துவை பல இடங்களில் தேடினர். பலனில்லை.

எனவே கணவர் மாயமானது குறித்து தளவாய்புரம் போலீசில் முருகேஸ்வரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாரிமுத்துவை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News