செய்திகள்
மாயம்

சாத்தான்குளம் அருகே மாணவன் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2019-07-05 11:20 GMT   |   Update On 2019-07-05 11:20 GMT
சாத்தான்குளம் அருகே மாயமான மாணவன் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தெற்கு அமுதுண்ணாகுடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி அஞ்சலா (வயது 55). இவர்களது பேரன் அஸ்வதன் என்ற வேலன் (16). இவனை ஆனந்தபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் சேர்த்திருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவன் திடீரென மாயமானான்.

இதுகுறித்து அவனது பாட்டி அஞ்சலா சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News