செய்திகள்
சாத்தான்குளம் அருகே மாணவன் மாயம்- போலீசார் விசாரணை
சாத்தான்குளம் அருகே மாயமான மாணவன் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தெற்கு அமுதுண்ணாகுடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி அஞ்சலா (வயது 55). இவர்களது பேரன் அஸ்வதன் என்ற வேலன் (16). இவனை ஆனந்தபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் சேர்த்திருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவன் திடீரென மாயமானான்.
இதுகுறித்து அவனது பாட்டி அஞ்சலா சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் தெற்கு அமுதுண்ணாகுடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி அஞ்சலா (வயது 55). இவர்களது பேரன் அஸ்வதன் என்ற வேலன் (16). இவனை ஆனந்தபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் சேர்த்திருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவன் திடீரென மாயமானான்.
இதுகுறித்து அவனது பாட்டி அஞ்சலா சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.