செய்திகள்
விசைப்படகுகள்

சூறாவளியால் கடலுக்கு செல்லவில்லை - ராமேசுவரத்தில் மீன் வர்த்தகம் பாதிப்பு

Published On 2019-07-04 08:15 GMT   |   Update On 2019-07-04 08:15 GMT
சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ. 1½ கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:

தமிழக கடற்கரையையொட்டி உள்ள மன்னார் வளைகுடா மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதிகளில் கடந்த 1-ந் தேதி முதல் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பியது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகு, நாட்டுப்படகுகளை கடலுக்குள் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம், பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன.

காற்றின் வேகம் குறைந்து இன்று கடலுக்கு செல்லலாம் என மீனவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடலில் இன்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 3-வது நாளாக ராமேசுவரத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News