செய்திகள்
திண்டுக்கல் அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
திண்டுக்கல் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பழைய வக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது50). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
வழக்கமாக காலையில் மோட்டார் சைக்கிள் மூலம் திண்டுக்கல் வந்து இங்கிருந்து பஸ்சில் பள்ளப்பட்டி செல்வார். இன்று காலை வழக்கம்போல் பழைய வக்கம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
பஞ்சம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு சென்ற கார் செல்வம் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.