செய்திகள்
சூலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
சூலூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போது வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சூலூர்:
மதுரை மாவட்டம் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (27). இவர் பாப்பம்பட்டி பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நண்பர்கள் தினேஷ் மற்றும் சேனை ஆகியோர்களுடன் இருசக்கர வாகனத்தில் சூலூர் வந்து கொண்டிருந்தபோது அமர்ஜோதி நகர் அருகே சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயத்துடன் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இ துகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
மதுரை மாவட்டம் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (27). இவர் பாப்பம்பட்டி பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நண்பர்கள் தினேஷ் மற்றும் சேனை ஆகியோர்களுடன் இருசக்கர வாகனத்தில் சூலூர் வந்து கொண்டிருந்தபோது அமர்ஜோதி நகர் அருகே சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயத்துடன் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இ துகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்