செய்திகள்

திருமங்கலம் அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி

Published On 2019-06-24 11:07 GMT   |   Update On 2019-06-24 11:07 GMT
திருமங்கலம் அருகே முன்னால் சென்ற டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பேரையூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நத்தத்துபட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம்(22) இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்தவர் மருது (20) இருவரும் டிராக்டரில் புதுக்கோட்டை புறப்பட்டனர்.

அதேபோல சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து(24) லாரியில் பொரிகடலை லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் சென்று கொண்டிருந்தார் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் டிராக்டர் மீது பின்னால் வந்த லாரி மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பரமசிவம், மருது இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் லாரியின் அடியில் சிக்கிய மாரிமுத்துவை கள்ளிக்குடி தீயணைப்பு துறையினர் ½ மணி நேரம் போராடி மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News