செய்திகள்
திருமணமான 1 வருடத்தில் லாரி மோதி வாலிபர் பலி
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் சாலையில் திருமணமான ஒரு வருடத்தில் லாரி மோதி வாலிபர் பலியானார்.
சிங்காநல்லூர்:
கோவை சூலூர் அருகே உள்ள போகம் பட்டியை சேர்ந்தவர் சதிஷ் குமார் (26) அங்குள்ள இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. வஞ்சிக்கொடி என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை சதிஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் நஞ்சுண்டாபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதிஷ் குமார் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி சாலை அடைக்கப்பட்டு உள்ளதால் நஞ்சுண்டாபுரம் வழியாக அனைத்து வாகனங்களும் செல்கிறது. அவைகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து நடைபெறுவதாகவும் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சூலூர் அருகே உள்ள போகம் பட்டியை சேர்ந்தவர் சதிஷ் குமார் (26) அங்குள்ள இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. வஞ்சிக்கொடி என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை சதிஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் நஞ்சுண்டாபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதிஷ் குமார் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி சாலை அடைக்கப்பட்டு உள்ளதால் நஞ்சுண்டாபுரம் வழியாக அனைத்து வாகனங்களும் செல்கிறது. அவைகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து நடைபெறுவதாகவும் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.