செய்திகள்
போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தகராறு செய்த தந்தை-மகன் கைது
போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் சட்டத்தின் கீழ் தந்தை, மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நாகராஜன். நேற்று இவர் பணியில் இருந்த போது கோவை போத்தனூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 30). இவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த்தின் தந்தை மணிவண்ணன் தனது மகனுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜனிடம் எப்படி என் மகன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தகராறு செய்தனர். இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தகராறு செய்த ஸ்ரீகாந்த், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த்தின் தந்தை மணிவண்ணன் தனது மகனுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜனிடம் எப்படி என் மகன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தகராறு செய்தனர். இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தகராறு செய்த ஸ்ரீகாந்த், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.