செய்திகள்

தேனி அருகே ஐ.டி.ஐ. மாணவியை கடத்தி சென்ற வாலிபர்

Published On 2019-06-21 11:26 GMT   |   Update On 2019-06-21 11:26 GMT
தேனி அருகே ஐ.டி.ஐ. மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (வயது 19). கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். முருகன் கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் கோவையிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரம்யா விடுமுறைக்காக சின்னமனூரில் உள்ள தனது தாத்தா ராஜேந்திரன் வீட்டுக்கு வந்திருந்தார்.

சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜேந்திரன் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கோவையைச் சேர்ந்த பிரசாத் என்பவர்தான் தனது பேத்தியை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News