செய்திகள்

பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Published On 2019-06-21 03:45 GMT   |   Update On 2019-06-21 03:45 GMT
பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் யோகா முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு யோகாசனங்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் செய்தனர்.
 
இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.



மேலும், “அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை இல்லை. மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். யோகா கற்றுத்தர 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயாராக உள்ளதால் விரைவில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும்” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
 
Tags:    

Similar News