செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது

Published On 2019-06-20 09:42 GMT   |   Update On 2019-06-20 09:42 GMT
கும்மிடிப்பூண்டி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் நிரக்சன் ராவ். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர் இரவு வேலை முடிந்து சிப்காட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம ஆசாமிகள் திடீரென நிரக்சன் ராவை மிரட்டி அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட விவேக், நவீன், சூரியபிரகாஷ் மற்றும் வினோத் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News