செய்திகள்
கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்த 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜா (45), மற்றும் வ.உ.சி.நகரை சேர்ந்த வேலுமணி (24) இவர்கள் 2 பேரும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரியில் படிக்கும் 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவி ஒருவரை செல்போனில் படம் பிடித்து அந்த மாணவிக்கு தொந்தரவு செய்து வந்தனர்.
இதனால் அந்த மாணவி மனவேதனை அடைந்தார். இதுகுறித்து அவர் தனது தாயிடம் கூறி அழுதார்.
இதனைத்தொடர்ந்து அந்த மாணவியின் தாயார் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பின்பு ராஜா, வேலுமணி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் வைத்திருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது. இதனைத்தொடர்ந்து ராஜாவையும், வேலுமணியையும் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜா (45), மற்றும் வ.உ.சி.நகரை சேர்ந்த வேலுமணி (24) இவர்கள் 2 பேரும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரியில் படிக்கும் 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவி ஒருவரை செல்போனில் படம் பிடித்து அந்த மாணவிக்கு தொந்தரவு செய்து வந்தனர்.
இதனால் அந்த மாணவி மனவேதனை அடைந்தார். இதுகுறித்து அவர் தனது தாயிடம் கூறி அழுதார்.
இதனைத்தொடர்ந்து அந்த மாணவியின் தாயார் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பின்பு ராஜா, வேலுமணி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் வைத்திருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது. இதனைத்தொடர்ந்து ராஜாவையும், வேலுமணியையும் போலீசார் கைது செய்தனர்.