செய்திகள்

ராஜபாளையம் அருகே இன்று வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2019-06-17 09:40 GMT   |   Update On 2019-06-17 09:40 GMT
ராஜபாளையம் அருகே இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

ராஜபாளையம்:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை சேர்ந்தவர் வேத மாணிக்கம்(வயது 57). இவர் இன்று அதிகாலை ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

ராஜ பாளையம் அருகே உள்ள சங்கரன்கோவில் ரோட்டில் மாணிக்கம் வந்து கொண்டிருந்தார். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் புழுதி பறந்தது. இதனால் அவரது கண்ணில் தூசி விழுந்தது. இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியது.

படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தெற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மூவேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News