செய்திகள்

ஊத்துக்கோட்டையில் தீக்காயம் அடைந்த 2 பெண்கள் பலி

Published On 2019-06-16 10:05 GMT   |   Update On 2019-06-16 10:05 GMT
ஊத்துக்கோட்டையில் தீக்காயம் அடைந்த 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39).

இவரது மகன் மதன் (19).இவர் சென்னை புரசை வாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 12-ந் தேதி வீட்டில் சமையல் செய்ய லட்சுமி அடுப்பு பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பிடித்து கொண்டது. தன் தாயை காப்பாற்ற முயன்ற மதனின் உடலிலும் தீப்பிடித்து கொண்டது.

அவரை காப்பாற்ற முயன்ற மதனின் உடலிலும் தீப்பிடித்தது. உடல் கருகிய தாய்-மகனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பலியானார். மாணவர் மதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹேமாவதி (வயது 28) வீட்டில் சமையல் செய்யும் போது நிலை தடுமாறி திடீர் என்று அடுப்பு மீது விழுந்து தீக்காயம் அடைந்தார்.

இதில் உடல் கருகிய அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு ஹேமாவதி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News