செய்திகள்
மேலூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
மேலூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது42). இவர் பாங்கியில் ரூ. 5 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு காரில் மேலூர் பஸ் நிலையம் அருகே வந்தார். அங்குள்ள கிளப் அருகே காரை நிறுத்தி விட்டு சுரேஷ் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மர்ம நபர் அந்த காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து மேலூர் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், மேலூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது42). இவர் பாங்கியில் ரூ. 5 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு காரில் மேலூர் பஸ் நிலையம் அருகே வந்தார். அங்குள்ள கிளப் அருகே காரை நிறுத்தி விட்டு சுரேஷ் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மர்ம நபர் அந்த காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து மேலூர் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.