செய்திகள்
இந்து தீவிரவாத பேச்சு - கமல் மீது திருவண்ணாமலை போலீசில் புகார்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது திருவண்ணாமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கோட்சே பற்றி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை இந்து முன்னணி நிர்வாகி வக்கீல் சங்கர் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பிற மதத்தினரை திருப்திபடுத்த இந்துக்களை கேவலப்படுத்த மதத்தின் பேரில் இந்தியாவில் பிரிவினையை தூண்டி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்ட முற்படுகின்றார்.
தீவிரவாதத்தில் மதத்தை முன்னிறுத்த ஒரு புதிய சூழ்நிலையை முன்னெடுத்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க எண்ணுகிறார்.
எனவே அவரின் தேர்தல் பரப்புரையை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்து உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரின் தேர்தல் பிரசாரத்துக்கு தடைவிதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கோட்சே பற்றி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை இந்து முன்னணி நிர்வாகி வக்கீல் சங்கர் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பிற மதத்தினரை திருப்திபடுத்த இந்துக்களை கேவலப்படுத்த மதத்தின் பேரில் இந்தியாவில் பிரிவினையை தூண்டி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்ட முற்படுகின்றார்.
தீவிரவாதத்தில் மதத்தை முன்னிறுத்த ஒரு புதிய சூழ்நிலையை முன்னெடுத்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க எண்ணுகிறார்.
எனவே அவரின் தேர்தல் பரப்புரையை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்து உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரின் தேர்தல் பிரசாரத்துக்கு தடைவிதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.