செய்திகள்

கழுகுமலையில் தலைமை ஆசிரியர் வீட்டில் திருட முயன்றவர் கைது

Published On 2019-05-11 12:30 GMT   |   Update On 2019-05-11 12:30 GMT
கழுகுமலையில் தலைமை ஆசிரியர் வீட்டில் இரவில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுகுமலை:

கழுகுமலை, ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் முத்தையா மகன் முருகராஜ்(வயது 51). இவர் வரகனூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் குடும்பத்தினருடன் முருகராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் காம்பவுண்டு சுவர் மீது ஏறி உள்ளே குதித்ததை பார்த்தார். உடனே முருகராஜ் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மர்ம நபரை மடக்கி பிடித்தனர். பின்னர் கழுகுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்து வந்த போலீசார் திருட முயன்ற நபரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் விசாரணையில் பழங்கொட்டை நடுத் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்லதுரை(38) என தெரியவந்தது. இவர் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். 
Tags:    

Similar News