செய்திகள்
காரைக்குடி அருகே பெண் அதிகாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
காரைக்குடி அருகே பெண் அதிகாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி (வயது 44). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்குவதற்கு முன்பு தனது நகைகளை கழற்றி மேஜையின் மீது வைத்து விட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்.
காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி (வயது 44). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்குவதற்கு முன்பு தனது நகைகளை கழற்றி மேஜையின் மீது வைத்து விட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்.
காலையில் எழுந்து பார்த்த போது மேஜை மீது வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை இரவில் யாரோ ஜன்னல் வழியாக அதனை திருடி சென்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திரிபுரசுந்தரி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.