செய்திகள்
திருவண்ணாமலையில் 107.2 டிகிரி வெயில் கொளுத்தியது
நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில், திருவண்ணாமலையில் நேற்று 107.2 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயில் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகத்தை துணியால் மூடி கொண்டும், கையில் குடை பிடித்தபடியும் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடர்ந்து பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. நேற்று 107.2 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது.
திருவண்ணாமலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசியது. பின்னர் மாலை 6 மணி அளவில் லேசான மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயில் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகத்தை துணியால் மூடி கொண்டும், கையில் குடை பிடித்தபடியும் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடர்ந்து பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. நேற்று 107.2 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது.
திருவண்ணாமலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசியது. பின்னர் மாலை 6 மணி அளவில் லேசான மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.