செய்திகள்

கணவர் இறந்த விரக்தியில் தூக்கு போட்டு பெண் தற்கொலை

Published On 2019-05-05 16:40 GMT   |   Update On 2019-05-05 16:40 GMT
பொள்ளாச்சி அருகே கணவர் இறந்த விரக்தியில் தூக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்க புரத்தை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 46). இவரது கணவர் பார்த்தீபன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்ததால் கவுசல்யாக மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கவுசல்யாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News