செய்திகள்
விழுப்புரத்தில் விபத்து - அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
விழுப்புரத்தில் இன்று அதிகாலை சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலமேடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(வயது 43). தொழிலாளி. இவர் விழுப்புரம் பஸ்நிலையத்தில் தனியார் பஸ்சில் பயணிகளை அழைத்து ஏற்றும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு குமரவேல் சைக்கிளில் விழுப்புரம் புதிய பஸ்நிலையத்துக்கு சென்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ் ஒன்று விழுப்புரம் பஸ்நிலையத்துக்குள் வேகமாக வந்தது.
அந்த பஸ் திடீரென்று சைக்கிளில் சென்ற குமரவேல் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட குமரவேல் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கு நின்ற பயணிகள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே குமரவேல் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விழுப்புரம் சாலமேடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(வயது 43). தொழிலாளி. இவர் விழுப்புரம் பஸ்நிலையத்தில் தனியார் பஸ்சில் பயணிகளை அழைத்து ஏற்றும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு குமரவேல் சைக்கிளில் விழுப்புரம் புதிய பஸ்நிலையத்துக்கு சென்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ் ஒன்று விழுப்புரம் பஸ்நிலையத்துக்குள் வேகமாக வந்தது.
அந்த பஸ் திடீரென்று சைக்கிளில் சென்ற குமரவேல் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட குமரவேல் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கு நின்ற பயணிகள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே குமரவேல் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.