செய்திகள்

பரீட்சை சரியாக எழுதாததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2019-04-12 09:07 GMT   |   Update On 2019-04-12 09:07 GMT
பரீட்சை சரியாக எழுதாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை வண்டியூர் கம்பர் தெருவைச் சேர்ந்த மலைச்சாமி மகள் சரண்யா தேவி (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். அப்போது நடந்த அரசு தேர்வில் இவர் சரியாக பரீட்சை எழுத வில்லை.

இதனால் தேர்வில் தோற்றுப்போய் விடுவேன் என்று பெற்றோரிடம் கூறினார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரண்யாதேவி தூக்குப்போட்டு தற் கொலை செய்தார். இது தொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகமலை புதுக்கோட்டையை அடுத்த தாரப்பட்டியைச் சேர்ந்தவர் கல்லாயுதம் (42). இவர் சம்பவத்தன்று காலை அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது பாம்பு கடித்தது.

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்லாயுதம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News